திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்துரையாடலானது இன்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment