திருகோணமலை- கந்தளாய் பிரதான வீதி 98 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.
மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனம் கந்தளாய் பகுதியில் இருந்து வந்ததாகவும் திருகோணமலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் சென்றதாகவும் மோட்டார் சைக்கிள் பயணித்த 98- கல்மெட்டியாவ பகுதியைச் சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment