திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வங்கி அட்டையை திருடி பணத்தை மோசடி செய்த சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொரவெவ, D-01 இல் வசிக்கும் நபரொருவரின் வங்கி அட்டை கடந்த 12 ஆம் திகதி தொலைந்து போனதாக மொரவெவ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொரவெவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி சின்ஹவின் ஆலோசனையின் பேரில் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயம்பதி, பொலிஸ் சாஜன்ட் 61727 நிரோசனா, பொலிஸ் சாஜன்ட் மற்றும் 61283 துசிதா 79967 அரம்போல ஆகியோர் அடங்கிய குழு குற்றவாளியை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை நொச்சிக்குளம், ஜின்னாநகரைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் எனவும் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.
No comments:
Post a Comment