வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வும் பதவியேற்பு நிகழ்வும்!! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வும் பதவியேற்பு நிகழ்வும்!!

Share This

 


திருகோணமலை வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வும் பதவியேற்பு நிகழ்வும் இன்று  (9) இடம் பெற்றது.

வெருகல் பிரதேச சபை செயலாளர் V. சுஜாதா தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றதுடன் உள்ளூட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோதர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பிரதிஷ்ட பிரதம குருவான அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கே.வை. வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 


வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும்பாண்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சேனுராமன் கருணாநிதி இன்றைய தினம் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது.


வெருகல் பிரதேச சபையில் 13 உறுப்பினர்கள் உள்ள போதிலும் தமிழரசு கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் உரையாற்றுகையில் 


பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை.எல்லோரும் சேர்ந்து  பயணிக்க வேண்டும்.சபைக்கு முக்கியமாக தேவை நிதி ஆகும்.வெருகல் பிரதேச சபை வருமானம் குறைந்த சபையாக காணப்படுகிறது.அரசாங்கத்தின் நிதி கிடைப்பது மிக குறைவாகும்.


வெருகல் பிரதேச சபைக்கு நிதிகளை ஈட்டுவதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages