திருமலையில் முத்தமிழ் மாணவர் மன்றம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலையில் முத்தமிழ் மாணவர் மன்றம்!

Share This

 


பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ்  மாணவர் மன்றமானது 2024/12/27 ஆம் நாளாகிய இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களது தனித் திறன்கள் வில்லுப்பாட்டு, கதை, கவிதை, பாட்டு நாடகம் என இயல் இசை நாடகம் ஆகிய செயற்பாடுகள் மூலம் சிறப்பாக வெளிப் படுத்தப் பட்டது.


இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக social development foundation நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. குணபாலன் நிரோஷன், திருக்கோணமலை சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் செயலாளர் திரு.கஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், விவேகானந்தா மீனவர் சங்கத் தலைவர் கீராலன், மகளிர் சங்கத் தலைவி கலாரூபன் தர்சினி, அறநெறிப் பாடசாலை ஆசிரியர் இளங்கோவன் ஜெயவதணி, அறிவு ஒளி மையத்தின் நிர்வாகச் செயலாளர் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் பங்கு பெற்றனர்.


மேலும் இந்த நிகழ்வை முத்தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவர் செந்தூரன் வர்ஷனன் துணைத் தலைவர் பு. ஜனுர்ஷிகா, பொதுச் செயலாளர் இளங்கோவன் ரிஷிகவி,

பொருளாளர் தினேஷ் குமார் சாத்விகா உட்பட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் சிறப்பான முறையில் செய்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Pages