2013ஆம் ஆண்டில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக 2,795 ஏக்கர் விவசாய நிலங்களை இலங்கை அரச கைப்பற்றியது இந்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்க வேண்டும் என சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரத்திலிருந்து 6.4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சம்பூர் கிராமம், 2006ஆம் ஆண்டு யுத்த நிலைமை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
2013ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட பின்னர், மக்கள் விவசாயம் மற்றும் கடல்நீர் மீன்பிடி தொழில்களை ஜீவனோபாயமாக மேற்கொண்டனர்.
இந்த கிராமத்தில் வாழும் 950 குடும்பங்களின் விவசாய நிலங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.2013ஆம் ஆண்டில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக 2,795 ஏக்கர் விவசாய நிலங்களை இலங்கை அரசு மற்றும் மின்சார வாரியம் கைப்பற்றியது.
அத்துடன் 2016ஆம் ஆண்டில் மேல் நீதிமன்றம் அனல் மின்நிலைய திட்டத்தை நிராகரித்த பின்னரும், சம்பூர் மக்களுடைய நிலங்கள் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த பகுதியில் கடற்படைதளம் அமைக்கப்பட்டதால், மக்கள் சோளம், கச்சான், உழுந்து, பயறு மற்றும் வெங்காயம் போன்ற பயிர் செய்கைகளை மேற்கொண்டு வந்த 180 ஏக்கர் நிலங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பேரழிவாகியுள்ளது.
ஆகவே இந்த நிலங்கள் மீள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment