கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் 2.3 பில்லியன் ரூபாய் செலவில் 33 திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 2.3 பில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள 33 முன்மொழியப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான சிறப்புக் கூட்டம் (14) ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது
இக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண அமைச்சுகளின் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment