மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, கல்வியில் கற்பதில் பிங்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களை முன்னேற்றும் நோக்கில் கவிதாயினி பாயிஷா அலி எழுதிய "வாசிப்பு ஊற்று" நூல் வெளியீட்டு விழா தி/கிண்ணியா அல்-ரவ்ழா வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது.
இதன்போது, 100 மாணவர்களுக்கு இந்நூல் பாத்திமா பௌண்டேஷன் அமைப்பினால் இலசமாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக கிண்ணியா திடீர் மரண விசாரனை அதிகாரி அஷ்ஷெய்க் ஷாபி, கணக்காளர் அஷ்ஷெய்க்க அப்துல் அஸீஸ் நழீமி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment