எஸ்.சுதாகரன் நியமனம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

எஸ்.சுதாகரன் நியமனம்!

Share This


திருகோணமலை  மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இடமாற்றம் பெற்று சென்றதுடன் புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக இன்று (01) மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Pages